கருத்துரை

வேளாண்மையில் ஆத்மநிர்பர் திட்டம் – புதுமைப் படைப்புக்கு  பிரதமர் அழைப்பு.


  ( அகில இந்திய வானொலியின் செய்தி ஆய்வாளர் பதாம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய அம்சமாக வேளாண் துறை விளங்குகிறது. இந்திய விவசாயிகள் இந்தியாவின் உணவைத் தேவையைப் பூர்த்தி செய்துள்ளனர். பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், 2020 நவம்பர் வரை, 80 கோடி இந்தியர்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படுவதற்கு இதுவே காரணம். பிரதமர் திரு நரேந்திர மோதி,…

புதிய உச்சத்தைத் தொடும் இந்தியா – பூட்டான் உறவுகள்.


( அரசியல் விமர்சகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) இந்தியாவும் பூட்டானும் 600 மெகாவாட் கோலோங்சு நீர் மின் திட்டத்திற்காக ஒரு ஒப்பந்தத்தில் இந்த வாரம் கையெழுத்திட்டன. இது, இரு நாடுகளுக்கும் இடையே, தனித்துவமான இருதரப்பு உறவுகளில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாகும். ரன்-ஆஃப்-ரிவர் திட்டம் கிழக்கு பூட்டானில் உள்ள கோலோங்சு ஆற்றின் கீழ் பாதையில் அமைந்துள்ளது. பூட்டானின் ட்ரூக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியாவின் சட்லுஜ்…

இக்கட்டில் இம்ரான் கான் – சொல்லாட்சி செல்லுபடியாகவில்லை.


(பாதுகாப்பு ஆய்வு மையத்தின் மூத்த ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அஷோக் பெஹூரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) ஒரு தயாரிக்கப்பட்ட பதில் தயாராக வைந்திருத்ததைப் போல, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், 2020 ஜூன் 29 அன்று பலூச் பிரிவினைவாதிகளால் கராச்சியில் பாகிஸ்தான் பங்குச் சந்தையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியாவைக் குறை கூற முற்பட்டார். இத்தாக்குதலில், நான்கு தீவிரவாதிகள் உள்ளிட்ட சுமார் 13 பேர் இறந்தனர். பாகிஸ்தானில் உள்ள எல்லா குறைபாட்டிற்கும்…

நேபாளத்தில் தீவிரமடையும் அரசியல் நெருக்கடி.


நேபாளத்தில் தீவிரமடையும் அரசியல் நெருக்கடி (நேபாள விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர், டாக்டர் நிஹார் ஆர் நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (என்.சி.பி) சில மூத்த தலைவர்கள் பிரதமர் திரு கே பி சர்மா ஓலி பதவி விலகக் கோரி வருவதால், தற்போதுள்ள கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில், நேபாளம் பெரும் அரசியல் கொந்தளிப்பை எதிர்கொள்கிறது. தவிர, முதன்முறையாக, 44 நிலைக்குழு (எஸ்சி) உறுப்பினர்களில்…

ஹாங்காங் விஷயத்தில் சீனாவுக்கு ஜி-7 கண்டனம்.


(கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் தித்லி பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) ஜூன் 30 அன்று, சீனாவில் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு, ஹாங்காங்கிற்கான சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியது. 1997 ஆம் ஆண்டில் சீனாவிற்கு ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டதன் ஆண்டு தினத்திற்கு முன்னர், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஹாங்காங்கின் சட்டமன்றத்தைத் தவிர்த்து, சீனா சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளது.…

“கரீப் கல்யாண் அன்ன யோஜனா” திட்டத்தை நீட்டித்து, பிரதமர் அறிவிப்பு.


(அகில இந்திய வானொலி செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) இரண்டாவது ஊரடங்குத் தளர்வு துவங்குவதற்கு சற்று முன்பு, பிரதமர் திரு நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். "நாட்டில் பருவமழை தொடங்கியுள்ளது. இது பல நோய்களைக் கொண்டுவருகிறது. அனைத்து இந்தியர்களும் மழைக்காலங்களில் தங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்" என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். "கொரோனாவின் இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை, உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா …

சர்வதேச கண்டனத்துக்கு உள்ளான சீனாவின் போர் மனப்பாங்கு.


(சீன விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ரூபா நாராயண் தாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) கோவிட் -19 தொற்றுநோய் பரவுவது குறித்த தகவல்களை சீனா பகிர்ந்து கொள்ளத் தவறிய நிலையில்,  அதன் விரோதப் போக்குக்கும், நடத்தைக்கும் கடந்த வாரம் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் குழுவின் 10 நாடுகளின் காணொளிக் கூட்டத்தில்,  கடுமையான கண்டனம் எழுந்தது. கடல்சார் உரிமைகள், இறையாண்மை உரிமைகள் மற்றும் கடல்சார் பிரதேசங்களின் மீதான நியாயமான நலன்களை…

தற்சார்பு அடைவதே இந்தியா முன்னேறுவதற்கான வழி – பிரதமர் திரு நரேந்திர மோதி.


(அகில இந்திய வானொலி செய்தி ஆய்வாளர் பதாம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) பிரதமர் திரு நரேந்திர மோதி, அகில இந்திய வானொலியில் தனது மாதாந்திர மனதின் நிகழ்ச்சியில், "மனதின் குரல் 2020ஆம் ஆண்டில் தனது பாதியளவு பயணத்தை நிறைவு செய்திருக்கிறது. இந்தக் காலத்தில் நாம் பல விஷயங்கள் குறித்துப் பேசியிருந்தோம். இந்த நிலையிலே உலகத்தைப் பீடித்திருக்கும் பெருந்தொற்றும், அது ஏற்படுத்தி இருக்கும் பெரும் சங்கடமும் நமது உரையாடல்களில்…

மீண்டும் தன் மீதே கோல் போட்ட பாகிஸ்தான்.


(அகில இந்திய வானொலி செய்தி ஆய்வாளர் கௌஷிக்ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) பாகிஸ்தானில் எல்லாம் சரியாக இல்லை. கோவிட் 19 தெருக்கடி மற்றும் கடுமையான பொருளாதார சூழ்நிலை என்ற இரட்டைச் சவால்களை நாடு எதிர்கொண்டுள்ளது. அதனுடன் சேர்த்து, அதன் உலகளாவிய பயங்கரவாதம் நிலைகுலைந்துள்ளது. பாகிஸ்தான் பிராந்திய பயங்கரவாதக் குழுக்களுக்கு ஒரு பாதுகாப்பான இடம் என்றும், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த அந்நாடு எதுவும் செய்யவில்லை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தனது சமீபத்திய…

எல்லையில் தூண்டி விடும் சீனாவுக்கு எதிராக உறுதியுடன் நிற்கும் இந்தியா.


(சீன விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் எம் எஸ் பிரதீபா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) கடந்த தசாப்தங்களாக, இந்தியா-சீனா எல்லையில், சீனா தனது இராணுவ உள்கட்டமைப்பைப் பலப்படுத்தி வருகிறது. மறுபுறம், இந்தியாவின் எல்லையில் இந்தியா தனது அடிப்படை வசதிகளை மிகவும் தாமதமாக மேம்படுத்தத் தொடங்கியது.  2014 ஆம் ஆண்டுக்குப்  பிறகு தான் இதில் வேகம் பிடித்தது. அதன் எல்லைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியத் தரப்பு இதுவரை 1000…