தென் சீனக் கடல் – புதிய சர்ச்சை.


(கிழக்காசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் பேராசிரியர் பாலாதாஸ் கோஷல் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) சர்வதேச சட்டவிதிகளை மீறி, வியட்நாமின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை சீனா ஊடுருவியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியட்நாம் கடற்கரையிலிருந்து வெறும் 60 நாட்டிகல் மைல் என்ற மிக அருகிய தூரத்தில் சீன ரோந்துக் கப்பல் நுழைந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீனாவுடன் சுமுக உறவு இல்லாத வியட்நாமின் பொருளாதாரத்தை அச்சுறுத்தும்…

இந்தியா – சவூதி அரேபியா: வர்த்தகத்தைத் தாண்டிச் செல்லும் இருதரப்பு உறவுகள்.


(ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்காசிய ஆய்வு மையத்தின் தலைவர் பேராசிரியர் பி ஆர் குமாரசாமி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் வழங்குபவர்  –  ஆ. வெங்கடேசன்.) பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், இரண்டு நாள் பயணமாக, இந்த வாரம் சவூதி அரேபியாவிற்குச் சென்றார். அவரது இப்பயணம், சவூதி அரேபியா குறித்த இந்தியாவின் கொள்கைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும், அவற்றால் விளையக்கூடிய பரஸ்பர நன்மைகளையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. பாரம்பரியமிக்க ஹஜ் புனிதப்…

பக்தாதியின் மறைவு அரபு உலகில் புதிய சகாப்தத்தை உருவாக்குமா?


(மேற்காசிய விவகாரங்கள் ஆய்வாளர், டாக்டர் ஃபசுர் ரஹ்மான் சித்திக்கி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – இராஜ்குமார் பாலா.) ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட அபு பக்கர் அல் பக்தாதியின் மறைவு குறித்த செய்தியை அடுத்து, ஈராக்கிய நகரமான மொசூலின் தெருக்களில் கொண்டாட்டங்களைக் காண முடிந்தது. ஈராக் மற்றும் சிரியாவுக்கான இஸ்லாமிய நாடு என்ற பொருளில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை நிறுவுவதாக இந்த சர்வாதிகாரி…

பதினெட்டாவது அணிசேரா நாடுகள் கூட்டம்.


 (அரசியல் விமரிசகர் எம். கே. டிக்கு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) அணிசேரா நாடுகள் இயக்கம் இன்றும் உயிர்ப்புடன் விளங்குகிறது என்பதை உலகுக்குப் பறைசாற்றும் விதமாக, அஸர்பெய்ஜானில் உள்ள அழகிய கடற்கரைத் தலைநகரான பாகுவில், அணிசேரா நாடுகளின் பதினெட்டாவது இருநாள் கூட்டம் நடந்து முடிந்தது. அணிசேரா இயக்கம் 60 ஆண்டுகளுக்கு முன்னதாக துவக்கப்பட்ட நாள் முதற்கொண்டே, மேற்கத்தியா நாடுகள் இந்த இயக்கம் அதிக நாட்கள் தாங்காது என்று…

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவது குறித்து அமெரிக்கா கவலை.


(அகில இந்திய வானொலியின் செய்தி  ஆய்வாளர் திரு கெளஷிக் ராய் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் – சத்யா அசோகன்.) பாகிஸ்தானினுள்ள சிறுபான்மை மதத்தினர், அங்கிருக்கும் பெரும்பான்மையினரின் எதேச்சாதிகாரத்தை எதிர்கொள்ள வேண்டிய துயர நிலையில் உள்ளனர்.  நாட்டில் சிறுபான்மையினர் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது.  பாகிஸ்தான் உருவானபோது,  இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், பார்சிக்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய சிறுபான்மையினர் எண்ணிக்கை, நாட்டின் மொத்த ஜனத்தொகையில் 28 சதவிகிதம் இருந்தது. …

பொருளாதாரத்  தொலை நோக்கை உறுதிப்படுத்தும் இந்திய – அமெரிக்க செயலுத்தி மன்றம்.


(நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் மூத்த சிறப்புப் பத்திரிக்கையாளர் மனீஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – லட்சுமண குமார்) இந்திய-அமெரிக்க செயலுத்தி மன்றத்தின் இரண்டாவது கூட்டம் இருதரப்பு உறவுகளை  மேலும் ஆழப்படுத்தியுள்ளது. தமது சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள்,  இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பொருளாதார  நாடாக உருவாக்க  உறுதிபூண்டிருப்பதாகத் தெரிவித்தார்.  இந்திய – அமெரிக்க செயலுத்தி மன்றத்தின்…

ஆர்.சி.இ.பி பேச்சுவார்த்தைகளில் உறுதியான நிலைப்பாட்டைத் தொடரும் இந்தியா.


(கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர். ராகுல் மிஷ்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் -ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) கிழக்காசிய உச்சிமாநாடு, ஆசியான் உச்சிமாநாடு மற்றும் அவற்றுடன் இணைந்த மற்ற சந்திப்புகள், நவம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடக்கவுள்ளன. இதற்கு முன்பாக, ஆர்.சி.இ.பி எனப்படும் விரிவான பிராந்திய பொருளாதாரக் கூட்டாளித்துவத்தின் செயலாக்கத்திற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுகின்றது. தெளிவான செயல்முறைகளுடன், 2020 ஜுன்…

கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் இந்தியா.


(கிழக்கு, தென்கிழக்கு ஆசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் தித்லி பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையில் முக்கியத்துவம் பெற்ற நாடுகளான ஃபிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பயணம் மேற்கொண்டார். முதலில் ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சென்ற அவர், அந்நாட்டுடனான இந்தியாவின் தூதரக உறவுகள் துவங்கி, 70 ஆண்டுகள் நிறைவுற்றதற்கான கொண்ட்டாட்டங்களில் பங்கேற்றார். பின்னர்…

ஐ.நா.வுக்கு வயது 74.


(ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி, அசோக் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ்.)  1948 ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 24 ஆம் தேதியன்று, ஐ நா தினம் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் 50 நிறுவன உறுப்பினர் நாடுகளில் ஒன்றாக, இந்தியாவும் 1945 ஆம் ஆண்டு, சான் ஃப்ரான்சிஸ்கோவில், ஐ நா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தம் அவ்வாண்டு 24…

சமையல் எரிவாயு இறக்குமதிக்கான இந்தியா – பங்களாதேஷ் புரிந்துணர்வு ஒப்பந்தம்.


(தி ஸ்டேட்ஸ்மன் பத்திரிக்கையின் சிறப்புப் பிரதிநிதி, திபங்கர் சக்கரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.) பங்களாதேஷில் இருந்து சமையல் எரிவாயு, எல்பிஜி,  அதாவது,  திரவ பெட்ரோலிய எரிவாயுவைப் பெருமளவில் இறக்குமதி செய்வதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோதி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா ஆகியோருக்கு இடையில் அண்மையில் புரிந்துணர்வு  ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இரு  அண்டை நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை  மேலும் உறுதிப் படுத்துவதில் இது முக்கியமான மைல்கல்லாக விளங்குகிறது. வடகிழக்கு மாநிலம் திரிபுராவுக்கு எல்பிஜி சுமுகமாக வழங்கப்படுவதை  உறுதி செய்வதில் சந்திக்கும் பிரத்யேகமான  சவாலை எதிர்கொள்வதற்காக  பங்களாதேஷுடன் புரிந்துணர்வை இந்தியா மேற்கொண்டுள்ளது.  …