பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, உள்கட்டமைப்பு முதலீட்டில் உத்வேகம் காட்டும் இந்தியா.


(மூத்த பொருளாதார பத்திரிக்கையாளர் ஜி.ஸ்ரீனிவாசன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ்.) பொருளாதார மந்த நிலையை வெற்றி கொள்ளவும், தனது தொழில் துறை ஆதரவுக் கொள்கை மற்றும் திட்டங்களைத் தொடரும் நோக்கிலும், புதனன்று மத்திய அரசு ஒரு மாபெரும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நூறு லட்சம் கோடி  ரூபாய்க்கு நாட்டின் உள் கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்வதே அந்தத் திட்டம். இந்த அளவுக்கு மிகப்பெரிய முதலீடானது, …

சர்ச்சைக்குள்ளாகும் ஜெனரல் பாஜ்வாவின் பணிக்கால நீட்டிப்பு.


(அரசியல் விமரிசகர் அஷோக் ஹாண்டூவின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ்.)  59 வயதான பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாவேத் பாஜ்வா அவர்கள்,  நவம்பர் 28 அன்று நள்ளிரவுடன் ஓய்வு பெற்றிருக்க வேண்டிய நிலையில், அவருக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க, ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி,  பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டிருந்த அறிக்கை செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.…

விண்வெளியில் இந்தியாவின் மிகவும் கூர்மையான கண்.


(மூத்த அறிவியல் விமரிசகர் பிமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தாவன் விண்வெளி மையத்திலிருந்து, ”விண்வெளியில் இந்தியாவின் மிகவும் கூர்மையான கண்” என்று அழைக்கத்தக்க மூன்றாம் தலைமுறை, நவீன புவி புகைப்பட, வரைபட செயற்கைக் கோளான கார்ட்டோசால் 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோவின் துருவ செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட்டான பிஎஸ்எல்வி –சி 47 இந்த…

பிரிட்டனில் திடீர் தேர்தல் – ஒரு கண்ணோட்டம்.


(ஐரோப்பிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் சங்கமித்ரா சர்மா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ்.) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் எனப்படும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் எட்டும் முயற்சியாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள், டிசம்பர் 12 ஆம் தேதி, முன் கூட்டியே, தேர்தல்களை அறிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளில் பிரிட்டனில் நான்காவது முறையாகத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ல் நடந்த…

சிபிஇசி திட்டத்தில் பங்கேற்பது குறித்து பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை.


(சீன விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் சானா ஹஷ்மி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) சீனாவின் பிஆர்ஐ எனப்படும் வளையம் மற்றும் சாலை முன்னெடுப்புத் திட்டமும், அதன்கீழ், சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் , சிபிஇசி (CPEC) திட்டமும், 2013 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட நாள் முதலே, இந்தியா இத்திட்டத்தின் மீது கவலை கொண்டுள்ளது. இத் திட்டம், இந்தியாவின் இறையாண்மையை பாதிப்பதோடு, விதிகளுக்குட்பட்ட ஒழுங்கு அமைப்பிற்கும் அது சவாலாக…

ஜப்பானில் ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு.


(நவோதயா பத்திரிக்கையின் ஆசிரியர் ரஞ்சித் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) உலகின் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் 20 நாடுகளின் பொருளாதார மேடையே ஜி-20 எனப்படும். இதில், 19 உறுப்புநாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளடங்கும். நடப்பாண்டு ஜூன் மாதம் ஒசாகாவில் நடந்த 14 ஆவது உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, ஜப்பானின் நகோயா நகரில், வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.…

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்.


(பத்திரிக்கையாளர் வி.மோகன் ராவ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.ராமமூர்த்தி.) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், மாநிலங்களவையின் 250 ஆவது அமர்வுக்கான கொண்டாட்டங்களுடன், கடந்த திங்களன்று துவங்கியது. இந்த மூன்றுவார குளிர்கால கூட்டத் தொடரின் முக்கிய அம்சமாக, மாநிலங்களவை, 250 ஆவது அமர்வில் அடியெடுத்து வைத்தது விளங்குகிறது. பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் மாநிலங்களவையில் பேசுகையில், உறுப்பினர்கள், தேசிய கண்ணோட்டத்தையும், பிராந்திய நலன்களையும் சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும்,…

தேவையற்ற விஷயங்களில் மூழ்கியுள்ள பாகிஸ்தான்.


(ஐடிஎஸ்ஏ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அஷோக் பெஹுரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி. குருமூர்த்தி.) கடந்த ஒரு மாத காலமாக, ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் வினோதமான அரசியல் நிகழ்வுகள் காணக் கிடைத்தன. பாகிஸ்தான் மக்களின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவதை விடுத்து, கடந்த மாதம் முழுவதும், மௌலானா ஃபஸ்லூர் ரெஹ்மானின் ஆஸாதி பேரணி மீதும், நோய்வாய்ப்பட்ட முன்னாள் பிரதமர், சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படலாமா என்பது குறித்த…

காலாபானி விவகாரம். 


(அரசியல் ஆய்வாளர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –  மாலதி தமிழ்ச்செல்வன்.) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள பித்தோர்கர் மாவட்டத்தின் இமயமலைப்  பகுதியில் இந்தியா, நேபாளம் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் எல்லைப் பகுதிகள் சந்திக்கும் முச்சந்தியில்  அமைந்துள்ள  காலபானி பகுதியின் உரிமை  தொடர்பான  சர்ச்சை   மீண்டும்  தலைதூக்கியுள்ளது.  இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களை உருவாக்கிய பிறகு திருத்தப்பட்ட வரைபடத்தை இந்தியா வெளியிட்டதை அடுத்து, இந்தப் பிரச்சனை மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது. புதிய வரைபடத்தில் இந்திய எல்லைக்குள் காட்டப்பட்டுள்ள காலாபனியின்  ஒரு பகுதியையும் அதன்  அருகிலுள்ள பகுதிகளையும்  தனக்குச் சொந்தமானவை என்று  நேபாளம் உரிமை கோருகிறது. காலபானி சர்ச்சையானது, நேபாள மன்னருக்கும் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் இடையே, 1816 ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க  சாகுலி  உடன்படிக்கையை நோக்கிப் பின் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த    ஒப்பந்தம்,…

இந்திய வெளியுறவு அமைச்சரின் இலங்கைப் பயணம்.


(இலங்கை விவகார செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் எம், சமந்தா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) இலங்கையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவர்களை சந்திக்க, இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் அவர்கள் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார்.  இந்தியாவுக்கு வருமாறு, அதிபருக்கு இந்தியப் பிரதமர் விடுத்துள்ள அழைப்பை அவருக்கு அளித்தார். இம்மாதம் 29 ஆம் தேதி இந்தியா வருமாறு விடுத்த அழைப்பை அதிபர் ஏற்றுக் கொண்டார்.…