டிரம்ப்பின் இரு நாடுகள் திட்டம்


(ஜே என் யூ-வின் மேற்காசியக் கல்வி மையத்தின் பேராசிரியர் பி ஆர் குமாரசாமி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ்.) விரைவில் ஆட்சி அதிகாரத்தை இழக்கும் நிலைக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் கொண்ட அமெரிக்க அதிபர் டோனல்டு ட்ரம்ப் அவர்களும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு அவர்களும் வெள்ளை மாளிகையில் சந்தித்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதலுக்குத் தீர்வு காண ஒரு அமைதித் திட்டத்தை அறிவித்தனர். அமைதியிலிருந்து வளமை என்ற பெயரிடப்பட்டுள்ள…

அண்டை நாடுகளுக்கு முதலிடம் – இந்தியாவின் பிராந்தியக் கண்ணோட்டம்.


(தெற்காசிய விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்மிருதி எஸ் பட்நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) இந்தியாவின் முதன்மை அறிவுசார் ஆய்வு அமைப்பான பாதுகாப்பு ஆய்வு நிறுவனம், புதுதில்லியில் 12 ஆவது தெற்காசியக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. ”அண்டைநாடுகளுக்கு முதலிடம் – இந்தியாவின் பிராந்தியக் கண்ணோட்டம்” என்ற கருப் பொருளுடன் நடைபெற்ற கருத்தரங்கில், கொள்கை அமைப்பாளர்கள், கல்வியாளர்கள், தெற்காசியா மற்றும் மியன்மார் நாட்டைச் சேர்ந்த வல்லுநர்கள் ஆகியோர்…

இந்தியாவின் பொருளாதார வரையறைகள்.


(மூத்த பொருளாதார ஆய்வாளர் சத்யஜித் மொஹந்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.) இந்தியா தனது பொருளாதாரத்தை விரைவில் 5 லட்சம் கோடி டாலர் அளவிற்கு மாற்றுவதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது. இதனை எட்டுவதற்கு, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான வலுவான சூழ்நிலையை உருவாக்குவதோடு, உலகப் பொருளாதாரத்துடன் வலுவான தொடர்புகளையும் உருவாக்குவது அவசியமாகும். இந்த இலக்கை விரைவில் அடைய, நொடிந்த நிலை மற்றும் திவால் குறியீடு (ஐபிசி) மற்றும்…

ஒளிரும் புதிய தொழில் முனைவு இயக்கம்


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் –ன் மூத்த சிறப்பு நிருபர், மனிஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ் புதிய தொழில்முனைவு இந்தியா திட்டம் 71 ஆவது குடியரசு தினத்தன்று தனக்குரிய இடத்தைப் பெற்றது. குறுகிய காலத்தில் மூன்று லட்சம்  வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ள 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய தொழில் முனைவுகள் நாடு முழுவதும் உருவாகியுள்ளன. அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் ஆரோக்கியமான சூழல் இந்தத் தொழில்முனைவுகளை உயர்…

பொருளாதார அமைப்பில் உலகின் கவனத்தை ஈர்க்கத் தவறிய இம்ரான் கான்.


(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) அதிகம் பேசப்பட்ட பயணமாக, உலகப் பொருளாதார அமைப்பு, 2020 கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் டாவோஸுக்கு மேற்கொண்ட பயணம் நிகழ்ந்தது. சுவிட்ஸர்லாந்து சொகுசு விடுதியில் அவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களை சந்தித்தார். அவர் வழக்கம் போல், இந்தியாவுக்கு எதிராகவும், காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேச்செடுத்தார். இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்துக்…

இந்திய அரசியல் சாசனம் : தேசத்தின் உச்சபட்ச சட்டம்


பேராசிரியர் பல்வீர் அரோரா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி மூன்றாண்டுகள் கடும் உழைப்பிற்குப் பிறகு நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆயுட்காலம் நீண்டதாக  இருக்கும் என்று சில ஆய்வாளர்கள் அன்றே கணித்திருந்தனர். இன்றும் இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உறுதியான அடித்தளமாக இது விளங்குவது, அறிவும் தொலைநோக்குப் பார்வையும் கொண்டு இதை உருவாக்கியவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அஞ்சலியாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் கலங்கரை விளக்கமாகத்…

மேற்கத்திய நாடுகளுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகுமா?


சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு பிரிவின் மூத்த ஆய்வாளர் டாக்டர் ஆசிஃப் ஷுஜா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி ஈரானிய ஜெனரல் காசிம் சொலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதையடுத்து நிகழ்ந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, ஐரோப்பிய ஒன்றியம் ஐ நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஈரானின் அணு ஆயுதங்கள் குறித்த விவகாரத்தை எழுப்பினால், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால், அது…

வெற்றிகரமாக ஏவப்பட்ட ஜி – சாட் 30 செயற்கைக்கோள்


INDIA’S SUCCESSFULLY LAUNCHES GSAT-30 மூத்த அறிவியல் விமரிசகர் பிமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி 14 வருடங்களுக்கு முன் ஏவப்பட்ட இன்சாட் – 4ஏ செயற்கைக்கோள் தனது ஆயுட்கால முடிவில்,  செயல்பாட்டை நிறுத்தவிருக்கும் தருவாயில், தடையில்லாத் தொடர்புச் சேவைகள் தொடர, இம்மாதம் 17 ஆம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்ட 41ஆவது தொலைதொடர்புச் செயற்கைக் கோள் ஜிசாட்-30 மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள…

மீண்டும் வெளிப்பட்டுள்ள சீனா-பாகிஸ்தான் இடையேயான கூட்டு


காஷ்மீர் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழுவில் சீன அரசு கேள்விகள் எழுப்பியது.  பாகிஸ்தான் அரசு ஆதரவு அளித்த போதும், பாதுகாப்பு குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவில்லை. அரசியல் சட்டப்பிரிவின் 370 பிரிவு நீக்கப்பட்ட பின்னர் மூன்றாவது முறையாக சீன அரசு இந்த பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபையில் எடுக்க முயற்ச்சி செய்த குறிப்பிட தக்கது ஆகும்.  இது இருதரப்பு பிரச்சனை…

வளர்ச்சிப் பாதையில் இந்திய-அமெரிக்க உறவுகள்


டாக்டர். ஸ்துதி பேனர்ஜி, அமெரிக்க விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  ஸ்ரீபிரியா சம்பத்குமார் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் உதவிச்  செயலர் திருமதி அலைஸ் வெல்ஸ் மற்றும் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேத்யு போடிங்கர் ஆகியோர், தொடர்ச்சியான பல இருதரப்பு சந்திப்புகளில் கலந்து கொள்ளவும், ஐந்தாவது ராய்சினா பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவும் இந்தியா வந்தனர். திருமதி வெல்சின் இந்த பயணத்தில், பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கான…