அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்த முடிவை ஒத்தி வைக்கும் நேபாளம்.
(நேபாளத்துக்கான முன்னாள் இந்தியத் தூதர் மஞ்சீவ் பூரி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) இந்தியாவும் நேபாளமும் 1,750 கிலோமீட்டர் நிலப்பரப்பை எல்லையாகப் பகிர்ந்து கொள்கின்றன. நேபாளம் இந்தியாவின் ஐந்து மாநிலங்களான சிக்கிம், மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநில எல்லைகளைத் தொட்டுள்ளது. இந்த எல்லையின் பெரும்பகுதி, கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் நேபாள ராயல் நீதிமன்றத்திற்கும் இடையில் 1816 இல் கையெழுத்திடப்பட்ட சுகாலி ஒப்பந்தத்தால் நிர்ணயிக்கப்பட்டது. இது காளி நதியை நேபாளத்தின் மேற்கு எல்லை என்று குறித்தது. அதாவது, நேபாளத்தின் பிரதேசம் காளி நதியின் கிழக்கே மட்டுமே அமைந்துள்ளது. கலாபனி, லிம்பியாதுரா மற்றும் லிபுலேக் ஆகிய பகுதிகளில்…