அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்த முடிவை ஒத்தி வைக்கும் நேபாளம்.


(நேபாளத்துக்கான முன்னாள் இந்தியத் தூதர் மஞ்சீவ் பூரி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) இந்தியாவும் நேபாளமும் 1,750 கிலோமீட்டர் நிலப்பரப்பை எல்லையாகப் பகிர்ந்து கொள்கின்றன. நேபாளம் இந்தியாவின் ஐந்து மாநிலங்களான சிக்கிம், மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநில எல்லைகளைத் தொட்டுள்ளது. இந்த எல்லையின் பெரும்பகுதி, கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் நேபாள ராயல் நீதிமன்றத்திற்கும் இடையில் 1816 இல் கையெழுத்திடப்பட்ட சுகாலி ஒப்பந்தத்தால் நிர்ணயிக்கப்பட்டது. இது காளி நதியை நேபாளத்தின் மேற்கு எல்லை என்று குறித்தது. அதாவது, நேபாளத்தின் பிரதேசம் காளி நதியின் கிழக்கே மட்டுமே அமைந்துள்ளது. கலாபனி, லிம்பியாதுரா மற்றும் லிபுலேக் ஆகிய பகுதிகளில்…

கோவிட்-19 நோய்க் கட்டுப்பாடு – சிறந்த அணுகுமுறையுடன் முன்னேறும் இந்தியா.


(தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் மூத்த சிறப்பு பத்திரிக்கையாளர் மனீஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) இரண்டு மாதங்களுக்குப் பிறகு, திங்களன்று, 532 விமானங்கள் இந்திய வானத்தில் பறக்கத் துவங்கின. எந்தவொரு கடினமான சூழலையும் உறுதியுடன் எதிர்கொண்டு வெற்றி பெறப் பாடுபடும் இந்தியாவின் தீர்மானத்தை எதுவும் முறியடிக்க முடியாது என்பதற்கு ஒரு தெளிவான சான்றாக இது விளங்குகிறது. விமான நிலையங்களும், பயணிகளும் கொடிய கோவிட் –19 நோயைக் கட்டுப்படுத்த, இந்தியா நன்கு தயார் நிலையில் உள்ளது என்பதை நிரூபித்தனர். வாழ்க்கை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற…

கோவிட்-19 நோய்க்கு எதிரான உலகின் போராட்டத்துக்கு முன்னுதாரணமாகத் திகழும் இந்தியா.


(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) கோவிட்-19 தொற்று நோயை எதிர்ப்பதற்கு வெளிநாடுகளில் உள்ள அதிகாரிகளுக்கு உதவ இந்தியா தனது மருத்துவ உதவியை வழங்கியுள்ளது. தற்போது வரை, 125 நாடுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள், மருத்துவ நிபுணர்களின் குழுக்கள் ஆகியவற்றை இந்தியா வழங்கியுள்ளது. சில வெளிநாட்டுக் குடிமக்களைத் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல இந்தியா உதவியுள்ளது. இந்தியா ஏற்கனவே தெற்காசிய மண்டலம், இந்தியப் பெருங்கடல் பகுதி, வளைகுடா (குவைத்), மத்திய ஆசியா (கஜகஸ்தான், ஆர்மீனியா, தஜிகிஸ்தான், உக்ரைன்) மற்றும் தொலைதூரத்தில் அமைந்துள்ள டொமினிகன் குடியரசு…

காலாபானி பிராந்திய விவகாரத்தில் சர்ச்சையைக் கிளப்பும் நேபாளம்.


(அரசியல் விமரிசகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் பித்தோர்கர் மாவட்டத்தில், இந்தியா, நேபாளம் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் முக்கோண சந்திப்பிலும், நேபாளத்தின் மேற்குப் பகுதியிலுள்ள தார்ச்சுலா மாவட்டத்திலும்  உள்ள காலாபானி பிராந்தியத் தகராறு குறித்து நேபாளம், முதன்முறையாக, ஒரு வன்மையான போக்கை வெளிப்படுத்தியுள்ளது. நேபாள கம்யூனிஸ்ட் அரசாங்கத்தால் மே 20 அன்று வெளியிடப்பட்ட புதிய அரசியல் மற்றும் நிர்வாக வரைபடம், சமீபத்திய சர்ச்சையை எழுப்பியுள்ளது. பிரதமர் கே. பி. ஷர்மா ஓலியின் அமைச்சரவை இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒப்புதல் அளித்த இப்புதிய வரைபடம், காலாபானி, லிம்பியாதுரா…

கோவிட்-19: இந்தோ-பஸிஃபிக் பிராந்தியத்தில் கூட்டுறவுக்கு வலு சேர்ப்பு.


(ஜேஎன்யூ பேராசிரியர் ஷங்கரி சுந்தரராமன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) கோவிட்-19 நோயின் யதார்த்தங்களை உலகம் எதிர்கொண்டுள்ள நிலையில், ஒரு புதிய இயல்புக்கு இணக்கமாக வேண்டிய அவசியம் உள்ளது. கூட்டு நடவடிக்கை மற்றும் கூட்டு அணுகுமுறைகள் மூலம், உத்தியோகபூர்வ செயல்பாட்டின் பழைய விதிமுறைகளின் தொடர்ச்சியான செயல்பாட்டுக்கு அனைத்து நாடுகளும் முயற்சி செய்கின்றன. பிராந்திய அளவில் நாடுகள் ஆலோசனை செயல்முறைகளை அதிகரித்துள்ளன. மார்ச் மாதத்தில் தெற்காசியாவில் தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பது குறித்து விவாதிக்க, சார்க் உறுப்புநாடுகளுடன் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் மேற்கொண்ட தலைமையும் முன்னெடுப்பு நடவடிக்கைகளும் இதனை வெளிப்படுத்தின. ஐரோப்பா…

கோவிட்-19 மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் கவனம்.


(நாடாளுமன்ற ஆய்வாளர் பேராசிரியர் ராஜாராம் பாண்டா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) 2017 ஆம் ஆண்டு, ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் (எஸ்சிஓ) முழு அளவிலான உறுப்பினராக இந்தியா இணைந்ததிலிருந்து, இந்த 8 உறுப்பினர்கள் கொண்ட அமைப்பில் இந்தியாவின் கை ஓங்கியுள்ளது. எஸ்சிஓ அமைப்பானது, அரசியல் மற்றும் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தும். இந்தியா நேர்மறையான பங்களிப்புக்களை இந்த அமைப்புக்கு நல்கியுள்ளது. கொரோனா கொள்ளை நோய் போன்ற நெருக்கடி மிக்க சூழலில்,…

கோவிட்-19 கொள்ளை நோய் – இந்தியாவின் பொருளாதார பதில் நடவடிக்கைகள்.


(பேராசிரியர் டாக்டர் லேகா எஸ் சக்ரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) இந்தியாவில் கோவிட்-19 கொள்ளை நோயின் தாக்கத்தை எதிர்கொள்ள,  பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்கத் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் அறிவித்தார். இது பல பகுதிகளாக, விரிவாக அறிவிக்கப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அவர்கள் அறிவித்த முதல் பகுதியில்,  நெருக்கடியில் வீழ்ந்த சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள்,…