பாதுகாப்பு அமைச்சரின் ரஷ்யப் பயணம்.


(ரஷ்யாவுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் இந்திராணி தலுக்தார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) உலகம் கோவிட் 19 தொற்றுநோயுடன் போராடி வரும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்கள் மேற்கொண்ட ரஷ்யப் பயணம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, ரஷ்யாவிற்கும், சீனாவிற்கும் முக்கியமானது. இந்த மூன்று நாள் பயணத்தின்போது, ​​இந்திய பாதுகாப்பு அமைச்சர், உயர்மட்ட ரஷ்ய இராணுவத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டாம் உலகப் போரில்…

நேபாளம் – அண்மைக்கால நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வது அவசியம்.


நேபாளம் - அண்மைக்கால நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வது அவசியம். (நேபாளத்துக்கான  முன்னாள் இந்தியத் தூதர் மஞ்சீவ் சிங் புரி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) இந்தியாவுடனான நேபாளத்தின் உறவுகள், மக்களின் தினசரி வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பின்னிப் பிணைந்ததாகும். இத்தகைய உறவுகள், உண்மையில், உலகில் வேறு எங்கும் காணப்படவில்லை. ஆனால், சில சிக்கல்களும், இந்திய விரோத தேசியவாதத்தை செயல்படுத்துவதற்கான  விருப்பமும் நேபாள அரசியலில் பரவியுள்ளன.      புவியியல் மற்றும் வரலாற்றால் பின்னிப்…

ரஷ்யா, இந்தியா, சீனா வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்.


(ஆய்வாளர் ராஜரிஷி ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர்களின் 17 ஆவது கூட்டம் சமீபத்தில் நடந்தது. ரஷ்யாவின் தலைமையில், கோவிட்-19 நெருக்கடிக்குப் பொதுவான பதில் நடவடிக்கைகள் குறித்துத் திட்டமிடுவதைத் தவிர, இரண்டாம் உலகப் போரில் நாசிசத்திற்கு எதிரான 75 ஆவது வெற்றி தினத்தைக் கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டது இந்தக் கூட்டம். இத்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே நடந்து வரும் எல்லைப் பிரச்சனையின் பின்னணியில், இந்த…

கால்வான் பள்ளத்தாக்கு குறித்த சீனாவின் உரிமைக் கோரலை நிராகரிக்கும் இந்தியா.


(சீன விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ரூபா நாராயண் தாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) இந்தியா-சீனா எல்லையில்  கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் ஜூன் 15 அன்று இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் எல்லையைப் பாதுகாத்த 20 இந்திய வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கொடூரமாக் கொல்லப்பட்ட பின்னர், லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சீனா தனது தவறான உரிமைக் கோரலை முன் வைக்கத் துணிந்தது. இந்தியாவின் இறையாண்மை கொண்ட பிராந்திய அதிகார…

இந்தியாவுக்கு வெற்றி நிச்சயம்.


(ஐஐஎஃப்டியின் முன்னாள் முதல்வர் பட்ட சார்யா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) கடந்த சில நாட்களாக, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான எல்லையில் திடீரென வெடித்த, தேவையற்ற  வன்முறைகள் குறித்து  ஊடகங்கள் மும்முரமாக அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றன. உண்மையில், பல நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினைகளில் வேறுபாடுகள் இருக்கக்கூடும். அவற்றில் பெரும்பாலானவை இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டங்களில் அமைதியான தீர்வுக்குப் பல வழிமுறைகளை அமைத்துள்ளன. இதற்கு சீனாவும் இந்தியாவும் விதிவிலக்கல்ல. அதனால்தான்,…

ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு.


(ஐ.நா.வுக்கான முன்னாள் நிரந்தர இந்தியப் பிரதிநிதி அசோக் குமார் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்) இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபக உறுப்பினர். ஜூன் 26, 1945 இல் சான் பிரான்சிஸ்கோ மாநாட்டில் ஐ.நா. சாசனத்தில் இந்தியா கையெழுத்திட்டது.. ஐ.நா. சாசனம் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலை (யு.என்.எஸ்.சி) தேர்ந்தெடுக்காத ஐந்து நிரந்தர உறுப்பினர்களுடன் (சீனா, பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன்) உருவாக்கியது. தவிர, இரண்டு ஆண்டு காலத்திற்கு,10…

நேபாளத்தின் புதிய வரைபடத்தை நிராகரிக்கும் இந்தியா.


(அரசியல் விமரிசகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) நேபாள நாடாளுமன்றத்தின் கீழ் சபையான, பிரதிநிதி சபா, 2020 ஜூன் 13 அன்று, நாட்டின் அரசியல் மற்றும் பிரதேச வரைபடத்தை மாற்றுவதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இது, உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள இந்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளை நேபாளப் பிரதேசமாகக் காட்டுகிறது. இந்த மசோதா குறித்த கலந்துரையாடல், முன்னதாக, சபையால் விரைவாக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மே 18, 2020 அன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்த நேபாளத்தின் புதிய வரைபடத்தில், கலபானி, லிம்பியாதுரா மற்றும் லிபுலேக் பகுதி ஆகியவை நேபாளப் பிரதேசமாக இடம் பெற்றுள்ளன. இந்தப் பகுதிகள் எப்போதுமே…

வளர்ச்சியைத் தாண்டிய அமைப்புக்கு பிரதமர் அழைப்பு.


(தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் லேகா சக்கரவர்த்தியின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) இந்திய வர்த்தக சபையின் (ஐ.சி.சி) 95 ஆவது ஆண்டு நிறைவின் கூட்டத்தொடரில், தொடக்க உரையை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், எந்தவொரு நெருக்கடியும் நமக்கு வாய்ப்புகளை வழங்குகிறது என்று கூறினார். “ஆத்மநிர்பர் பாரத்” என்று அவர் உருவாக்கிய திட்டமான, தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க, இந்த வாய்ப்புகளை நாம் அடையாளம் காண வேண்டும். பருவநிலை மாற்ற நெருக்கடிக்கு மத்தியில், ஒரு பெரிய பொது சுகாதார நெருக்கடியான கோவிட் 19 தொற்று…

கோவிட் – 19 நோய் நெருக்கடிக்கிடையே, பொருளாதார நெருக்கடியில் உழலும் பாகிஸ்தான்.


(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) பாகிஸ்தான், கோவிட் 19 தொற்று நோய் மற்றும் தீவிர பொருளாதார நெருக்கடி என்ற இரட்டை சவால்களின் தாக்கத்தில் உழலுகின்றது. இது நாட்டின் மிக மோசமான கட்டத்தில் ஏற்பட்டுள்ளது. 600 கோடி  டாலர் கடனுதவியை விடுவித்தபோது, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) விதித்த நிபந்தனைகளின் காரணமாக, பாகிஸ்தான் ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியின் கீழ் இருந்தது. கடந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீத முதன்மைப் பற்றாக்குறையை பாகிஸ்தான் இலக்காகக் கொண்டிருந்தது. விலக்குகளை நீக்குவது, சிறப்பு சலுகைகளைக் குறைப்பது, வரி நிர்வாகத்தை…

இந்திய ஆஸ்திரேலிய உறவுகள் – காணொளி உச்சி மாநாடும் அதன் பலன்களும்.


(ஜேஎன்யூ பேராசிரியர் ஷங்கரி சுந்தரராமன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) கோவிட் -19 தொற்று நோயால் உலகம் முழுவதும் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பயணத் தடைகளுக்கு மத்தியில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தங்கள் முதல் காணொளி இருதரப்பு உச்சிமாநாட்டை நடத்தின. இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த, நடப்பாண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களில் மேற்கொள்ளப்படவிருந்த இருதரப்புப் பயணங்களுக்குப் பதிலாக, இந்த காணொளி உச்சிமாநாடு நடந்துள்ளது. தொற்று நோய் காரணமாக, போக்குவரத்தில் கட்டுப்பாடு அவசியமானதைத் தொடர்ந்து, தலைவர்கள் இடையே காணொளி மூலம் உச்சிமாநாடு நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மை நிலைக்கு மேம்படுத்துவது குறித்து,…